கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்கச் செய்துவிட்டது.அன்றாடம் கொரோனா தொற்றுநோயின் விளைவுகளை இன்றுவரையில் அனுபவித்த வண்ணமே கடந்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் ஒமைக்ரான் தற்போது திரிபடைந்து EG.5.1.1 எனும் வடிவில் பரவலடைகின்றது.
திரிபடைந்துள்ள குறித்த வைரஸ் இந்தியா-மகாராஷ்டிராவில் மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒருவர் மாத்திரமே பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் என ஆய்வுகளின் முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.
எனினும், மக்கள் தொடர்ந்தும் கொரோனா விதிகளை பின்பற்றினால் இதனைப் பரவாமல் தடுக்கலாம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் சுகாதார கண்காணிப்பு அதிகாரி பபிதா கம்லாபுர்கர் கூறுகையில்,
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கோவிட் -19 நெறிமுறையைப் பின் பற்றுவது அவசியம்.
கொரோனா விதிகளை மக்களை தவறாமல் பின் பற்ற வேண்டும் என்று சுகாதார துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.