ஆதரவற்று நிற்கும் மறைந்த நடிகை சிந்துவின் மகள்: நடிகை ஷகிலா வேதனை

0
300

’அங்காடி தெரு’ சிந்து நேற்று புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஷகிலா, சிந்து குறித்து பலரும் அறியா விடயங்களை கூறினார்.

அவர் பேசுகையில், “அங்காடித்தெரு சிந்து இன்று நம்முடன் இல்லை என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது. கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தார்.

வெயில், மழை எதையும் பார்க்காமல் பட்டினியாக கிடந்தவர்களுக்கு உதவி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் சாப்பிடக் கூட முடியவில்லை.

சிந்து பட்ட கஷ்டத்தைப் பார்த்து அவர் இறந்துவிடவேண்டும் என்று நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தோம். அந்த அளவுக்கு அவர் கஷ்டத்தை அனுபவித்துவிட்டார்.

அவருக்கு மகள் இருக்கிறாள். யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கும் அவளுக்கு உறுதுணையாக இருந்து அவளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

அதேபோல சின்னத்திரை பெரிய திரை போன்ற அனைத்து சங்கத்தினரும் சிந்துவின் மகளுக்கு உதவி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.