யாழில் 19 வயது யுவதியுடன் ஓட்டமெடுத்த 54 வயதான காதலன் அடித்துக்கொலை; 6 பேர் கைது; பலருக்கு வலைவீச்சு!

0
148

யாழ் சுன்னாகத்தில் 19 வயதான காதலியுடன் ஓடிய 54 வயதான காதலன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நபர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை பொலிஸார் தேடிவருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.சங்குவேலி பகுதியை சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறி இருந்தார்.

யாழில் 19 வயது யுவதியுடன் ஓட்டமெடுத்த 54 வயதான காதலன் அடித்துக்கொலை ; 6 பேர் கைது... பலருக்கு வலைவீச்சு! | 54 Year Old Boyfriend Beaten To Death

 திருமணம் செய்து வைப்பதாக கூறி அடித்துக் கொலை

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால் இருவரும் ஊர் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதால், மயக்கமடைந்த நிலையில் அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

யாழில் 19 வயது யுவதியுடன் ஓட்டமெடுத்த 54 வயதான காதலன் அடித்துக்கொலை ; 6 பேர் கைது... பலருக்கு வலைவீச்சு! | 54 Year Old Boyfriend Beaten To Death

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் 06 பேரை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவுக் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: