முல்லைத்தீவில் கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கும் மீன்கள்!

0
224

முல்லைத்தீவு மாவட்டம் – மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதத்து கிடந்துள்ளன.

நாட்டில் தற்போது நிலவுகின்ற கடுமையான வெப்பநிலை காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


Gallery Gallery  Gallery