முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்!

0
190

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (03) காலை மத்துகம நகரில் வைத்து குமார வெல்கம மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மரக்கறிக் கடையில் வாக்குவாதம்

மத்துகம நகரிலுள்ள மரக்கறிக் கடையொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான குமார வெல்கம மீது மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.