கொக்குவிலில் யாசகம் பெற்று வந்த நபர் சடலமாக மீட்பு..

0
156

கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள திறந்த அறை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சொந்த வீடு இன்றி நீண்ட காலமாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாசகம் பெற்று வந்த நபர் சடலமாக மீட்பு | Person Receiving Yasakam Was Recovered Dead Body

உயிரிழந்தவர்

உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முத்துத்துரை சித்திராந்தன் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உறவினர்கள் கொழும்பில் வசித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.