கொழும்பில் போராட்ட களத்தில் பதற்றம்! போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்

0
207

கொழும்பு – பொரளை பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் மீது சற்றுமுன் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொழும்பு – ராஜகிரிய பகுதியில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து திருப்பி அனுப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்ட போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்ட களத்தில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு பதிவாகியுள்ளது.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தினரின் ஏற்பாட்டில் நடத்தப்படும் போராட்டம் கொழும்பு – பொரளை பிரதான சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையொன்று இன்னும் சற்று நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தினரின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்போது EPF ETF ஓய்வூதியத்தில் கை வைக்காதே, அடிமை தொழிலாளர் சட்டம் வேண்டாம், சகல ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கு, IMF மரண பொறியை தோற்கடிப்போம் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு வாசித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் அமைதியின்மை பதிவாகியுள்ளது.

இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ள போதும் இந்த உத்தரவை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery
Gallery
Gallery
Gallery