யாழ் அச்சுவேலியில் பூச்செடிகள் மற்றும் பயன் தரும் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய நபர்கள்

0
215

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள் மற்றும் பயன்தரு மரங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. 

அடையாளம் தெரியாத நபர்கள் முகங்களை மறைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. 

அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்கள்

இந்த நிலையில் சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேகநபர்கள் பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Gallery