மாத்தறை ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது.
மாத்தறை மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா இடம்பெற்றது. எனினும் அந்த நிகழ்வுக்கு ராஜபக்ச சகோதரர்கள் யாரும் அழைக்கப்படவில்லையாம்.
பெட்டிப் பாம்பாக ராஜபக்சக்கள்
அதேசமயம் பரிசளிப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோர் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை பாடசாலையின் தற்போதைய அதிபராக இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவரின் உறவினர் என்று தெரியவந்துள்ளது.
ஒருகாலத்தில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மக்களை ஏமாற்றியதால் இன்று பெட்டிப் பாம்பாக மக்களால் ஒதுக்கப்பட்டுள்ளனர்.