யாழ்.வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறுகோரி பழைய மாணவர்கள் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை (17)காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரி சைவப் பாரம்பரியமிக்கது என்று சுட்டிக் காட்டிய போராட்டகாரர்கள் வேற்று மதத்தை சார்ந்த ஒருவரை அதிபராக நியமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.