வானில் தெரிந்த சந்திராயன்-3

0
234

அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திராயன்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வானியல் ஆர்வலர் டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பதிவில்,

சந்திராயன்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும் அதன்பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திராயன்-3 விண்கலம் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.