யாழில் மாணவியை தாக்கிய அதிபர்; விசாரிக்க சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்!

0
366

யாழில் பாடசாலை அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை பாடசாலைக்கு விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த புதன்கிழமை தரம் 4ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீது பாடசாலை அதிபர் தாக்கியதாக பெற்றோரினால் குற்றம் சாட்டப்பட்டது.

யாழில் மாணவியை தாக்கிய அதிபர் ; விசாரிக்க சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்! | Principal Assaulted The Student

 அதிபர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தீவக கோட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் பாடசாலையில் விசாரணைகளை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில் அங்கு கூடி இருந்த பொதுமக்கள் கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

யாழில் மாணவியை தாக்கிய அதிபர் ; விசாரிக்க சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்! | Principal Assaulted The Student

மேலும் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிபரினால் மூர்க்கத்தனமாக கடுமையாக தாக்கப்பட்ட மாணவி, வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.