தாய்லாந்தில் கடந்த 9 ஆண்டுகளாக பிரயுத் ஓச்சா பிரதமராக பொறுப்பு வகித்தவர். மேலும் 2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சி முதலிடம் பிடித்தது.
இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் பிரயுத் ஓச்சா கூறியுள்ளதாவது,
![அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நாட்டின் பிரதமர்! | Thailand Pm Prayut Chan O Cha Quit Politics அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நாட்டின் பிரதமர்! | Thailand Pm Prayut Chan O Cha Quit Politics](https://cdn.ibcstack.com/article/25498104-5a4a-4aac-b8cf-c9aeb1170fdc/23-64aee9e034d7b.webp)
கட்சித் தலைமையில் இருந்து விலகுவதன் மூலம், அரசியலில் இருந்து முழு நேரமாக விலகுவதாக முடிவு செய்துள்ளேன்.
கட்சியின் பிற தலைவர்களும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.