நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டு இருக்கும் – சீமான்

0
184

நான் முதலமைச்சரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான்,

இதுவரை 800க்கும் மேற்பட்டோர்  பலி

திமுக அரசை கடுமையாக சாடியதுடன் நிரந்தர முதல்வர் என எழுதி வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும் என்றார். அதோடு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இலங்கை கடற்படையால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் பலியாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே தாம் ஆட்சிக்கு வந்தால் நெய்தல் படையை உருவாக்கி மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என்றும் சீமான் காட்டமாக தெரிவித்தார்.