பெண் என நினைத்து ஏமாந்த மாணவன்; துஸ்பிரயோகத்திற்கு உள்ளான அவலம்

0
257

பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் என நினைத்து ஏமாந்த மாணவன்; துஸ்பிரயோகத்திற்கு உள்ளான அவலம் | A Student Who Is Mistaken For A Girl Woe To Abuse

வைத்தியசாலையில் மாணவன்

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும் பெண்ணாக தன்னை காட்டிக்கொண்ட சந்தேக நபர் பேஸ்புக் ஊடாக அவருடன் உரையாடி பின்னர் கம்பஹாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் என நினைத்து ஏமாந்த மாணவன்; துஸ்பிரயோகத்திற்கு உள்ளான அவலம் | A Student Who Is Mistaken For A Girl Woe To Abuse

சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.