முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை என உறுதிமொழி

0
156

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்யப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதிமொழி ஒன்றை வழங்கியுள்ளார்.

தன்னை கைது செய்வதனை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சட்டமா அதிபர் தப்புல லிவேரா மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது சட்டமா அதிபர் திணைக்களம் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளது.