தூங்கிக்கொண்டிருந்த கணவனுக்கு தீ வைத்த மனைவி..!

0
160

கொழும்பு மாவட்டம் – பிலியந்தலை மொரட்டுமுல்ல, சமரகோன் பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இன்றைய தினம் (18-06-2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், குடும்ப தகராறு காரணமாக மனைவி கணவருக்கு தீ வைத்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் நீண்ட நாட்களாக வேறுவொரு நடருடன் தவறான உறவில் இருந்து வந்ததாகவும், அந்த உறவு காரணமாக தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி தீ வைத்து எரித்ததில் அவரது கால்கள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குறித்த பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிவித்த மனைவி, தனது கணவர் தான் இறந்துவிட்டதாக நினைத்து தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்