பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது; காஞ்சனா விஜிசேகர

0
170

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா-இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகிய இரண்டிற்கும் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் ஒக்டேன் 95 அல்லது ஏனைய பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலியப் பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் | No Shortage Of Petroleum Products Minister Assures

நாடளாவிய ரீதியில் ஒக்டேன் 95 இன் நாளாந்தத் தேவை சுமார் 80 – 100 மெட்ரிக் டன்கள் என வெளிப்படுத்திய விஜேசேகர, அனைத்து நிரப்பு நிலையங்களிலும் போதுமான அளவு இருப்புக்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார்.