யாழில் பாடசாலை தெரியாமல் சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகள்!

0
194

யாழ். மாவட்ட பாடசாலையொன்றின் உயர்தர மாணவ, மாணவிகள் பாடசாலை நிர்வாகத்தின் அனுமதியின்றி சில நாள் சுற்றுலா சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் நடந்துள்ளது. அண்மையில் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்தபோது மாணவர், மாணவியர் 30 பேர் வெளிமாவட்ட சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர்.

இதற்காக மாணவிகள் ரூ.3,000 வீதம் செலுத்தியுள்ளனர். மாணவர்கள் சிலர் அதைவிட அதிக தொகை பணம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சில நாட்களின் முன்னர் அந்த பாடசாலையின் அதிபர் ஓய்வு பெற்றார். ஆசிரியை ஒருவரிடமே பதில் அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதன் பின்னரே மாணவர்கள் சுற்றுலா சென்று வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.