இலங்கை ஜனாதிபதி ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தினால் இந்நாட்டை ஒருபோதும் மீட்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியல்ல Lakshman Kiriella குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உடனடியாக தேசிய மட்டத்திலான தேர்தல் ஒன்றை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்றைய தினம் (15-06-2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே லக்ஸ்மன் கிரியல்ல இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச உதவி கிடைக்கும் என ஆட்சியாளர்கள் கூறினாலும் குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை. மேலும், நாட்டை மீட்பதற்காக எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும்.