குருந்தூர் மலை காணி விவகாரம்: ரணில் வழங்கிய உத்தரவு; தொல்பொருள் ஆய்வாளர் எதிர்ப்பு

0
278

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி ரணில் வழங்கிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் நேற்று முன்தினம் (13.06.2023) ஜனாதிபதி ரணிலுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குருந்தூர்மலை விகாரையை சூழவுள்ள காணிகள் இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் கைகளுக்குச் சென்றால் எதிர்காலத்தில் அந்தப் பிரதேசம் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘குருந்தூர்மலை விகாரைக்குச் சொந்தமில்லாத காணியைப் பொதுமக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.

குருந்தூர்மலை விகாரையைச் சுற்றிலும் பல்வேறு புத்த மடாலயங்களின் இடிபாடுகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன.