ரஷ்ய படையினர் உக்ரேனின் கிரிவ்யி ரிக் நகரில் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 மாடி குடியிருப்புக் கட்டடமொன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.
இதனால் 10 பேர் பலியானதாகவும் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நகரின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஒலெக்ஸாண்டர் வில்குல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை கிரிவ்யி ரிக் நகரமானது உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊராகும் என்பது குறிப்பிடத்தக்கது.