ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷெய்க் மொஹமட் பின் ஸயட் அல் நஹ்யன், அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வருடம் நவம்பர் மாதம் டுபாய் எக்ஸ்போ சிட்டியில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் கட்சிகளின் மாநாட்டிற்கு (COP28) கலந்து கொள்ளுமாறு அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.