புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்கு கணவர் வற்புறுத்துவதாக தெரிவித்து மனைவி பொலிஸில் முறைப்பாடு அளைத்துள்ளார்.
இந்நிலையில் மனைவியை உறவுக்கு சித்திரவதை செய்த 67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிபென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
14 வயதில் திருமணம்
அண்மையில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற 54 வயதுடைய பெண் ஒருவர் தனது 67 வயது கணவருக்கு எதிராக இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு 14 வயதாக இருக்கும்போது விருப்பமில்லாமல் தனது கணவரை திருமணம் செய்ததாகவும் தங்களுக்கு திருமணமாகி 40 வருடங்களாவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கும் தனது கணவருக்கும் மூன்று மகன்கள் இருப்பதாகவும் மூத்த மகனுக்கு சுமார் 40 வயது என்றும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சர்மிந்த டி சில்வாவின் அறிவுறுத்தலின்படி பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமார மற்றும் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.