யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் உரிய மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை
இந்நிலையில் மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
அதேவேளை சொந்த நாட்டிலேயே அகதியாக இடம்பெயர்ந்து பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த J/ 233 கிராம சேவையாளர் பகுதி மக்களுக்கு மூன்று தசாப்தங்களின் பின்னர் அவர்களது காணிகள் மீள கிடைக்கவுள்ளமை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.