யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0
154

யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ் நல்லூர் வீரமாகாளி அம்மன் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு! பக்தர்கள் மகிழ்ச்சி | The Order Court Veeramakali Amman Of Jaffna Nallur

நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைது செய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி  இன்று மாலை 5 மணிக்கு ஆலய  மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்  இன்று காலைமுதல்  அம்மனைகாண காத்திருந்த மக்களுக்கு  நீதிமன்றின் உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி: