நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சசித் தாரக சமரகோன் என்ற 26 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ஆசிரியர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.