முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
செயற்பாட்டாளர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் அவர் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளார்.
வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற பொலிஸார்
கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆலயத்தில் பொங்கல் நிகழ்விற்காக வந்திருந்தவேளை இவர் பொலிஸாரால் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.