யாழில் இரவோடு இரவாக நடந்த பாரிய அழிப்பு! அம்பலப்படுத்திய சிறீதரன்

0
132

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் தனியார் ஒருவரால் இரவோடு இரவாக 200 பனை மரங்கள் தறிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (31.05.2023) இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்த விடயத்தை அபிவிருத்தி குழுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தீவகப் பகுதிகளில் பனைவளம் அழிக்கப்படுவது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 7000 பனைகளை தறிக்க ஏன் அனுமதி வழங்கினீர்கள் எனவும் பனை அபிவிருத்தி சபை அதிகாரியை பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.