மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று வெளிவந்த கதையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் சீற்றமடைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது.
அவர் மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்று கதை பரவி வருகின்றது. அவர் பதவி விலகிய தினமான மே 9 ஆம் திகதி மீண்டும் பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.
ரணில விக்ரமசிங்க கூறிய பதில் இது தொடர்பில் ஜனாதிபதி காரியாலய அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விநவிய போது கடும் சீற்றதுடன் “இதை விட்டுவிட்டு இருக்கின்ற வேலையைப் போய் பாருங்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.