மக்களின் முறைப்பாட்டையடுத்து 200 அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை!

0
230

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளில் பணிபுரியும் 200 அதிகாரிகளுக்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் முறைப்பாடுகளை செய்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொடுப்பதில்லை, உதாசீனம், தரக்குறைவாக நடந்துகொள்ளல் உள்ளிட்ட பல முறைப்பாடுகள் இந்த அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் விசாரணை

இது தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.