இன்று இடம்பெற்ற கோர விபத்தில் எட்டு பேர் காயம்

0
191

குருணாகல் புத்தளம் வீதியில் வாரியபொல வெரபொல பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகலிலிருந்து வந்த வேன் ஒன்றும் பாதெனிய பகுதியில் இருந்து வந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது வேனில் வந்த மூன்று பெண்கள் மற்றும் காரில் வந்த தம்பதிகள் உட்பட ஆறு பேர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.