இந்து கோவிலை விகாரையாக்கி பெருமெடுப்பில் இடம்பெற்ற நிகழ்வு! யாழில் சம்பவம்

0
149

 தமிழர் தாயகம் எங்கும் அரசு புத்தர் கோயில்களை அமைத்து தமிழரின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி, தமிழரின் இருப்பை முற்றுமுழுதாக இல்லாது செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக யாழ்.காங்கேசன்துறை – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

யாழின் முக்கிய பிரதேசத்தில் இந்து கோவிலை விகாரையாக்கி பெருமெடுப்பில் இடம்பெற்ற நிகழ்வு! | The Event That Took Place Hindu Temple Of Yah

இராணுவம் பொலிஸார் குவிப்பு

நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழின் முக்கிய பிரதேசத்தில் இந்து கோவிலை விகாரையாக்கி பெருமெடுப்பில் இடம்பெற்ற நிகழ்வு! | The Event That Took Place Hindu Temple Of Yah

இந்த விகாரையிலேயே இன்று கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. தையிட்டிப் பகுதியில் இருந்த நரசிம்ம வைரவர் கோயிலைப் பௌத்த கோயிலாக மாற்றி, பாரியளவிலான கட்டடம் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.