ஜனாதிபதியிடம் விசேட வாகனங்கள் கையளிப்பு!

0
147

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் 03 விசேட வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட வாகனங்கள் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

விசேட வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு ! | Handing Over Special Vehicles To The President

சட்டவிரோத நடவடிக்கைகள்

கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும் (Combat All Terrain Vehicle) கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

விசேட வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு ! | Handing Over Special Vehicles To The President

இந்த வாகனங்கள் கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.