யாழ் பேருந்தில் அரச உத்தியோகத்தர் பெண்ணிடம் சேட்டை; துவைத்தெடுத்த பயணிகள்!

0
269

யாழ்ப்பாணம் – நாவற்குழிப் பகுதியில் நேற்று காலை தனியார் பஸ்சில் வந்த நடுத்தவயதான நபர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டு இறக்கிவிடப்பட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கீழே இறக்கப்பட்ட நபர் மூக்கால் இரத்தம் வழிந்து முகம், கண்கள் வீங்கிய நிலையில் நீண்ட நேரம் தெருவோரம் இருந்த பின்னர் அங்கிருந்து சென்றதாக தெரியவருகின்றது.

நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நபர்

இது தொடர்பாக அப்பகுதியில் நின்றவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பெண் அரச ஊழியர் அத்துமீறி தொட்டதாக கூறியே குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்கள்.

குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு அங்கு நின்றவர்கள் பயணிகளிடம் கூறிய போதும் அனைவரும் தமது பயணம் தாமதம் ஏற்படக்கூடும் என்பதனால் நடுவழியில் இறக்கிவிட்டதாக தெரியவருகின்றது.

அதேவேளை பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் வைத்தியசாலை ஊழியர்கள் அணியும் ஆடையுடன் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.