அம்மன் சிலை விவகாரம்; வழக்கறிஞர்களுக்கு சரவணபவன் அழைப்பு!

0
245

இன்றையதினம் அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜராக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார்.

நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்தித்தின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதிமன்றம் அழைப்பு

சித்திரை புத்தாண்டு தினத்தன்று தீவக நுழைவாயிலில் நயினா தீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடன் தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை நல்லை ஆதீனத்தில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி கலந்துரையாடி இன்று இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக நீதிமன்றத்தில் ஆஜராகுவதென தீர்மானித்துள்ளனர்.