பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்

0
248

ஹம்பந்தோட்டை பாடசாலையில் கல்வி பயிலும் 12 வயதான சிறுமி பாடசாலைக்கு வருவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ​போது பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அச்சிறுமியை காரில் விடுதிக்கு அழைத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவரே இச்செயலை செய்ததாக ஹம்பந்தோட்டை துறைமுக பொலிஸாரால் நேற்று (29) அவ் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆசிரியர் | Teacher Abuse The Student

இரண்டு பிள்ளைகளின் தந்தை

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 39 வயதானவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

தான் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி பொலிஸாரிடமோ அல்லது அவரது தாயாரிடமோ கூறவில்லை. ஆசிரியருடன் ஏற்பட்ட காதல் உற​வே இதற்குக் காரணம் என பொலிஸார் சந்​தேகிக்கின்றனர்.

கடந்த 28ம் திகதி சந்தேநபரான ஆசிரியர் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்து சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு விடுதிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பாடசாலை அருகே மீண்டும் இறக்கிவிட்டு சென்றதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மகள் வீட்டுக்கு வர தாமதமானதால் தாயார் பாடசாலைக்கு வந்ததாகவும் மகள் பாடசாலையில் இல்லாததால் அதிபருக்கு தகவல் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சிறுமி வீட்டுக்கு செல்லும் வழியில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்துள்ளார்.

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிபர் அஜித் ரோஹனவின் பூரண மேற்பார்வையின் ஹம்பந்தோட்டை மாவட்டத்திக்கு பொருப்பான பிரதி பொலிஸ் அதிபர் மகேஷ் ​சேனாரத்னவின் கீழ் பொலிஸாரால் சந்​தேகத்துக்கு உரிய ஆசிரியர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.