யாழில் இடம் பெற்ற கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சாரதி

0
179

வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரிய வந்துள்ளது.

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழப்பு | Accident That Took Place Today In Jaffna

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.