நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடு முடங்கும் சாத்தியம்…!

0
454

இலங்கை முழுவதும் நாளை (09.03.2023) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் நேற்றைய தினம் (07.03.2023) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட ஒன்றிணைந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. 

சந்திப்பில் தீர்மானம்

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடு முடங்கும் சாத்தியம்...! | One Week Strike In Sri Lanka

இந்த சந்திப்பில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அரசின் வரிக்கொள்கைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல சேவைகள் ஸ்தம்பிப்பதால் நாடு முடங்கும் சாத்தியம் காணப்படுவதாக சமூக அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.