எட்டுவயதான சிறுமியை தேரர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
70 வயதான தேரரே இச் செயலை செய்தார் எனும் குற்றச் சாட்டில் கைது செய்வதற்கான விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரான அந்த பௌத்த தேரர், இரண்டு மாதங்களாக அந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பௌத்த தேரர் அங்குள்ள விஹாரையிலேயே தங்கியிருப்பவர் என்றும்.
எனினும், தற்போது தலைமறைவாகிவிட்டார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.