யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் உத்தியோகஸ்தர்

0
245

முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி கற்குழி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரதீப் (வயது -26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக  விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.