காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் தற்கொலை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
404

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஹரி திடீரென தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவருடைய திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் தற்போது இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டனர்.

 கதாநாயகி வெண்ணிலாவின் கல்லூரி நண்பர்

தற்போது இந்த சீரியலின் கதாநாயகி வெண்ணிலாவின் கல்லூரி நண்பராக தமிழ் கேரக்டரில் கானா பாடகர் ஹரி நடித்திருப்பார். கானா பாடகராகவும் ஒரு நடிகராகவும் பாடல் எழுதுபவராகவும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அதோடு குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் மலர், பாண்டியின் திருமணத்தின் போது பாடப்பட்ட பாடல் இவருடையது தான். இந்த பாடலில் இவர் எழுதி, பாடி, நடித்தும் இருப்பார்.

இவருடைய திறமைக்கு வாய்ப்புகள் அந்த அளவிற்கு கிடைக்காமல் இருந்தாலும் காற்றுக்கென்ன வேலி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.