தென்னிந்திய நடிகையும் அமைச்சருமான ரோஜாவின் செருப்பை ஊழியர் ஒருவர் கையில் எடுத்துசென்றமை தொடர்பில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை பார்வை இடுவதற்காக சென்றியிருந்தார். இப்போது கடற்கரையில் மணலில் இறங்கி நடக்கத் தொடங்கிய ரோஜா மணலில் தண்ணீரில் இறங்கினார்.
அப்போது ரோஜா அணிந்து வந்த செருப்பை அவரது ஊழியர் கையில் வைத்து இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அமைச்சர் என்பதற்காக ஊழியரை செருப்பை எடுக்க வைப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என்றும் சக மனிதனைக் கூட ரோஜாவுக்கு மதிக்க தெரியவில்லை என்றும் விளாசி வருகின்றனர்.
ஒரு காலத்தில் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக ரோஜா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.