தந்தையின் கொடுமையால் 35 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிய 12 வயது பள்ளி மாணவன்!

0
393

12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சைக்கிளில் சுமார் 35 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச்சிறுவன் திம்புலாகல பிம்பொகுன கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 08 ஆம் திகதி தந்தையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் சென்ற சிறுவன் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிப்பட்டுள்ளது.

தந்தையின் கொடுமையால் 35 கிலோமீற்றர் சைக்கிளில் சென்ற 12 வயது பாடசாலை மாணவன்! | School Student Cycled 35 Kilometers

அதற்கமைய, சிறுவனை தேடி சென்ற பொலிஸார் பெற்றோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் மகனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தந்தை அடித்து துன்புறுத்துவதகால் பூனானியில் வசிக்கும் தாயை தேடிச் சென்றதாக சிறுவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமல்கம பிரதேசத்திலுள்ள கால்

நடை கண்காணிப்பாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

காணாமல் போன திம்புலாகல, பிம்போகுன கிராமத்தைச் சேர்ந்த குறித்த 12 வயது சிறுவனை தேடுவதற்காக 50 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று தயார்படுத்தப்பட்டிருந்ததாக அரலகங்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.