வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி; கவனத்தை ஈர்த்த சிறுவர்கள்!

0
317

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டுள்ள சிறுவர்கள் சிலர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணியின் மூன்றாவது நாளான இன்றைய தினம் (06.02.2023) முல்லைத்தீவிலிருந்து திருமலை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

பேரணியில் சிறுவர்கள்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி; கவனம் ஈர்த்த சிறார்கள்! | Rally From North To East Attracted Children

திருகோணமலை நோக்கி செல்லும் இந்தப் பேரணி தற்போது கொக்கிளாய் வீதி வழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதன் பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் பேரணியினர் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த பேரணியில் முன்னால் கைகோர்த்து சில சிறுவர்கள் தாமும் பேரணியில் இணைந்துசெல்கின்றனர் .

தம்மினத்தின் மீதான விடிவுக்காக விளையாடவேண்டிய வயதில் அச்சிறுவர்கள் பேரணியில் கலந்துகொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளமை பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.   

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி; கவனம் ஈர்த்த சிறார்கள்! | Rally From North To East Attracted Children
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி; கவனம் ஈர்த்த சிறார்கள்! | Rally From North To East Attracted Children