கமிலாவை(Camilla) திருமணம் செய்யவேண்டாம் என தந்தையிடம் இளவரசர் வில்லியமும்(Prince William) ஹரியும்(Prince Harry) கேட்டுக்கொண்டனர், என ஹரி தனது புதிய நூலில் தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச அளவில் வெளியாகவுள்ள ஸ்பெயர் என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஹரி(Prince Harry) இதனை தெரிவித்துள்ளார்.
கமிலாவை(Camilla) மணம் முடிக்கவேண்டாம் என சார்ல்ஸை கேட்டுக்கொண்டதாக புதிய நூலில் குறிப்பிட்டுள்ள ஹரி(Prince Harry) கமிலா(Camilla) இரக்கமற்ற சிற்றன்னையாக காணப்படுவார் என அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.
தேநீருக்கு முன்னர் , கமிலா(Camilla) என்னிடம் இரக்கமற்ற விதத்தில் நடந்துகொள்வாரா கதைப்புத்தகங்களில் வருகின்ற இரக்கமற்ற சிற்றன்னைகள் போல நடந்துகொள்வாரா என நினைத்தது எனக்கு நினைவில் உள்ளது ஆனால் கமிலா அப்படி நடந்துகொள்வில்லை, வில்லியம் போல நானும் அதற்காக நன்றியுடைவனாக உள்ளேன் என ஹரி(Prince Harry) புதிய நூலில் தெரிவித்துள்ளார்.
வில்லியமும் தானும் மற்றைய பெண் என்றே கமிலாவை அழைத்ததாக ஹரி(Prince Harry) எழுதியுள்ளார். தந்தைக்கு உள்ள காதல் உறவு குறித்து வில்லியம் நீண்ட காலமாக சந்தேகம் கொண்டிருந்தார்,அது வில்லியமை துன்புறுத்தியது குழப்பமடையச்செய்தது என தெரிவித்துள்ள ஹரி (Prince Harry) சந்தேகம் உறுதியானதும் தான் இதனை தடுப்பதற்காக எதனையும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியால் வில்லியம் பாதிக்கப்பட்டார் அதனால் அதன் பின் அவர் எதுவும் சொல்லவில்லை எனவும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கமிலாவுடனான(Camilla) உறவுகள் குறித்து தங்கள் தந்தை பகிரங்கமாக அறிவிக்க விரும்பியவேளை தானும் வில்லியமும் உத்தியோகபூர்வமாக முதல்தடவை கமிலாவை சந்தித்தாக ஹரி (Prince Harry) புதியநூலில் எழுதியுள்ளார்.