ராஜபக்சேக்கள் அழிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டைப் போன்று புத்தாண்டு அமையட்டும்!

0
309

தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணங்களை இல்லாமல் செய்த ஆண்டு 2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட  தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சர்களை சிதைத்த 2022 ஆம் ஆண்டுபோலவே புதிய ஆண்டும் அமையட்டும்! | Let 2023 Also Be Like Year When Rajapaksas Died

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முகநூல் பதிவு

2023 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி – எங்கள் வீட்டில் பால்சோறு இல்லாத 13 வருடங்கள். இந்த 13 வருடங்களில் 2022ம் ஆண்டே மிகச்சிறந்த வருடம் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்தவர்களை, தங்களை மன்னர் என நினைத்துக்கொண்டிருந்தவர்களை துவம்சம் செய்த வருடம் இது.

இதன் காரணமாகவே நான் பிறந்துள்ள புத்தாண்டு 2023ம் ஆண்டும் 2022 போன்று காணப்படவேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என சந்தியா எக்னலிகொட பதிவிட்டுள்ளார்.