கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்!

0
520

கிணற்றில் இருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.