கார்த்திகை விரத உற்சவத்தினமான நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வீடுகளில் சிட்டி விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள இந்துக்களின் இல்லங்களில் நேற்று(07-12-2022) இரவு 06.30 மணியளவில் இருந்து திருக் கார்த்திகை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட சில இடங்களில் சர்வாலய தீபத்திருநாளை முன்னிட்டு கண்ணுக்கு அழகூட்டும் வகையில் ஒளிமயமான விளக்குகள் ஏற்றப்பட்டு காணப்படுகின்றது.