யாழில் கரையொதுங்கிய உருக்குலைந்த சடலம்; பரபரப்பு!

0
349

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளவாலை – சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு தகவல்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து – சம்பவ இடத்திற்கு இளவாலை பொலிஸார் விரைந்தனர்.

அதற்கிடையில் சடலம் கடல் அலைமூலம் கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து நீதிவான் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த ஆண்டிறுதியிலுப் இவ்வாறு சடலங்கள் யாழ் மாவட்ட கடற்கரையோரத்தை சூழ கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

https://www.taatastransport.com/